நபிகளார் (ஸல்) அவர்கள் கட்டமைத்த முஸ்லிம் சமூகத்தின் ஆணிவேராக இருந்தது மச்ஜிதுன்நபவி. முஸ்லிம்களின் சமூகக் கேந்திரமாக விளங்கிய அந்த பள்ளியினையே முன்மாதிரியாகக் கொண்டு உலகெங்கிலும் மஸ்ஜிதுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
அந்த மஸ்ஜிதை ஏக இறைவனுக்கு அடியார்கள் வணக்கம் செலுத்திடும் இடமாக மட்டுமல்லாது சமூகத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் இஸ்லாமிய அச்சில் வார்தேடுத்திடும் கல்விக்கூடமாகவும் அது விளங்கியது.
நாமும் இன்று பல மஸ்ஜிதுகளை நிர்மானிக்கின்றோம் அதன் மூலம் இறைவனுக்கு வழிபாடுகளையும் செய்கின்றோம், ஆனால் அதனை ஒட்டி சமூகத்திற்கான பங்கினைக் குறித்தும், மஸ்ஜிதுகள் எதற்காக நிறுவப்படவேண்டும் என்பதையும் அதன் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திடவேண்டும் என்பது குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
நாள்: மே 11, 2018
@ மஸ்ஜிதுல் முஹாஜிரீன், கோவை
இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...