Masjidhul Ihsaan - Coimbatore

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

29.7.2012 ஞாயிறு அன்று மாலை முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தவர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஆரம்பமாக வருகை தந்தவர்கள் அனைவரையும் பள்ளிவாசலில் முஸ்லிம் சகோதரர்களுடன் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பிறகு முஸ்லிம்கள் எவ்வாறு தங்களுடைய தொழுகையை நிறைவேற்றுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலோடு காத்திருந்த சகோதர சமுதாயத்தவர்கள் தொழுகையை பார்க்கும் வண்ணம் பள்ளியின் பின் புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுகை முடிந்து செல்லும் முஸ்லிம்கள் பள்ளிக்கு வந்த சகோதரர்களை சந்தித்து கைகளை குலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.